ஆக்ரோஷமாக விளையாடுவோம்..வெற்றி பெறுவதே இலக்கு! ஹர்பஜன் சிங்

322

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்வோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இழக்காமல் இருக்க இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுவது அவசியம்.

அதுமட்டுமின்றி கடைசி போட்டியிலும் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம்.

கடந்த போட்டிகளின் முடிவுகளை மறந்து பந்துவீச்சாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும், மேலும் இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்து அணியை வெற்றி பெற செய்யும் பல துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

இந்திய அணியில் உள்ள சுழல்பந்து வீச்சு கூட்டணி என்ற முறையில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சியில் ஓட்டங்கள் விட்டு கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு.

இதற்காக நான் உள்பட இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், நாளை போட்டியில் ஆக்ரோஷமான முறையில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். எந்தவொரு கடினமான சூழலாக இருந்தாலும், சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற செய்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE