ஹொட்டலில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 பேர் பலி: சோமாலியாவில் பரபரப்பு

297

சோமாலியாவில் ஹொட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தலைநகர் மொகதிஷீவில் ஷஹாபி என்ற ஹொட்டல் உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் இந்த ஹொட்டலில் தான் தங்குவார்கள் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று இந்த ஹொட்டலில் புகுந்த தீவிரவாதிகள் காரில் இருந்த குண்டை வெடிக்க செய்தனர். பின்னர் ஹொட்டலில் உள்ளே புகுந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இந்த தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும் 10 வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சோமாலிய சிறப்பு படை பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல்-ஷபா இஸ்லாமிய தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.  இந்த தாக்குதல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

SHARE