அஸ்வின் தான் எங்களுக்கு முதல் அச்சுறுத்தல்: டு பிளிசிஸ் புலம்பல்

326

டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு அஸ்வின் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என்று அந்த அணியின் முன்னணி வீரர் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், எதிர்வரும் 5ம் திகதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டு பிளிசிஸ் கூறுகையில், “முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் மொகாலி ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும்.

முதல் நாளில் இருந்தே பந்து நன்றாக திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனால் இந்திய அணியின் சுழற்பந்து வீரர் அஸ்வினை நாங்கள் எதிர்த்து விளையாடும் முறை தொடரை தீர்மானிக்கும்.

அஸ்வின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர். ஆனால் அவரை டி20 தொடரில் சிறப்பாக எதிர்கொண்டோம் என்று நினைக்கிறேன்.

ஆனால் டெஸ்ட் தொடரில் அவர் சூழ்நிலையோடு ஒன்றி பந்தை மேலும் சுழலச் செய்வார். அதனால் அஸ்வின் தான் எங்களுக்கு முதல் அச்சுறுத்தல்.

இருப்பினும் அவருக்கு எதிராக நாங்கள் சிறந்த திட்டத்தை ஏற்படுத்துவோம். அவரை எந்த வழியில் எதிர்கொள்கிறோமோ, அதுவே இந்த தொடரை உறுதியாக தீர்மானிக்கும்.

இந்த டெஸ்ட் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் திட்டத்தை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தி, வெற்றிக்கான வாய்ப்பிற்காக காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE