“ஐஎஸ் விமானத்தை வீழ்த்தியதாக சொல்வது வெறும் பிரச்சாரமே”

297
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது நடுவானில் சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பேர் கொல்லப்பட்டனர்.
வெளிக் காரணிகளாலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கும் நிறுவனமான கொகலிமாவிய தெரிவித்திருந்தது.
ஆனால், இது மிகவும் அவசரமாக சொல்லப்பட்ட கருத்து என்றும் எந்த சரியான தகவலின் அடிப்படையிலும் சொல்லப்படவில்லை என்றும் தேசிய விமான முகாமையின் தலைவரான அலெக்ஸாந்தர் நெரத்கோ தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.
இம்மாதிரி அவசரப்பட்டு முடிவுகளுக்கு வர வேண்டாமென எகிப்து அதிபர் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஆர்வமுடையவர்கள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கலாம் என பிரிட்டனுக்கு விஜயம் செய்வதற்கு முன்பாக பிபிசியிடம் பேசியபோது எகிப்து அதிபர் அல் சிசி கூறினார்.
“ஐஎஸ் குழுவினால் விமானம் வீழ்த்தப்படுவதாகச் செய்யப்படும் பிரச்சாரம், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கான ஒரு வழியாகும். சைனாய் தீபகற்பம், குறிப்பாக அந்தப் பகுதி எங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது” என அல் சிசி கூறியிருக்கிறார்
SHARE