தவறு செய்தால் பந்து பறக்கும்.. ஷேவாக் எங்களுக்கு அச்சுறுத்தும் கனவு: ஸ்டெய்ன் புகழாரம்

304

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தும் கனவாக இருந்தவர் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் எடுத்து சாதனை படைத்த ஷேவாக், கடந்த 20ம் திகதி தனது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் “நம்பர் ஒன்” பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், ‘ஷேவாக் எங்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “நீங்கள் அவருக்கு சரியான லைனை விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி பந்து வீசினால் கூட அதை அவர் வெளியில் அனுப்பிவிடுவார்.

சென்னையில் நடைபெற்ற எங்களுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 300 ஓட்டங்கள் குவித்துவிட்டார். ஷேவாக் போன்ற வீரர்களுக்கு பந்து வீசியுள்ளேன். ஆனால் ஷேவாக் தான் எங்கள் அணிக்கு ஒரு அச்சுறுத்தும் கனவு.

அப்போது இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருந்தது. இருப்பினும் ஷேவாக்கை விட சிறந்த வீரரை நான் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.

SHARE