அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தப்பி சென்றவர் பிணமாக மீட்பு!!

307
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த முகாமில் உள்ள புகலிடம் கோருவோர் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கன்றன.

எனவே முகாமின் பாதுகாப்பு காவலாளிகள் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்றும் SBS தமிழ் செய்தி தெரிவிக்கிறது.

புகலிடம் கோரும் பலரும் மேலும் அச்சம் கொண்டிருப்பதாக இந்த முகாமை பார்வையிட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் Kelvin Davis கூறியுள்ளார்.

SHARE