இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டியின் 4 வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக 2–வது நாள் ஆட்டமும், 3–வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இன்றைய 4–வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆடுகளத்தின் வெளிப்புறபகுதி ஈரப்பதமாக இருந்ததால் திட்டமிட்டப்படி காலை 9.15 மணிக்கு போட்டி தொடங்கவில்லை. மழையால் இந்த டெஸ்ட் பெரும் பகுதி பாதிக்கப்பட்டதால் போட்டி ‘டிரா’வில் முடிகிறது. 4 போட்டி கொண்ட இந்த தொடரில் இந்திய 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. |