தென் ஆப்பிரிக்க வீரருக்கு நேர்ந்த கொடூரம்

302
இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் நவாஸ் கான் என்ற நபர் வாழ்ந்து வருகிறார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நவாஸ், 2013ம் ஆண்டு குறைபாடு உள்ளவர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகேயுள்ள காட்டில், தலை துண்டித்து நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், இவரது நண்பர் துமா, மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து இக்கொடூர செயலை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது பிரச்னைகள் தீர வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி கூறியதாகவும், துண்டித்த தலையுடன் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியதால் நவாஸ் கானை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE