உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு குடியிருப்பானது 90 மிதக்கும் வீடுகளுடன் 109 அறைகள் கொண்ட உணவு விடுதியும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு குடியிருப்பும் 3 நிலைகளை கொண்டதாகவும், அதில் ஒரு நிலை கடலுக்கு அடியிலும், அடுத்த நிலை நீர் மேற்பரப்பிலும், படுக்கை அறை மற்றும் குளியல் அறைகள் கடலுக்கு அடியிலும் அமைக்க உள்ளனர். 2016 ஆம் ஆண்டு திறப்புவிழா காணவிருக்கும் இந்த சிறப்பு குடியிருப்பு தொகுப்பினை 25 நாடுகளில் உள்ள 200 நிபுணர்களை வடிவமைத்து வருகின்றனர்.