முன்னாள் காதலியை சரமாரியாக தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: சுவிஸில் பரபரப்பு

274
சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள Fribourg நகரில் மத்தியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் வசித்து வந்த 58 வயதான நபர் ஒருவருக்கும், 48 வயதான பெண் ஒருவருக்கும் உறவு இருந்துள்ளது.

ஆனால், சில காரணங்களால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று முன்னாள் காதலி பணிபுரிந்த அலுவலகத்திற்கு அந்த நபர் கத்தியுடன் சென்றுள்ளார்.

அலுவலகத்தில் பெண்ணை கண்டு ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவர் மீது பாய்ந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயங்களுடன் அந்த பெண் கீழே சரிந்து விட, பெண்ணை தாக்கிய அதே கத்தியால் அந்த நபர் தன்னை தானே சரமாரியாக குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த கொடூர காட்சியை கண்ட சிலர் பொலிசாருக்கு அவசர தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளனர்.

நகரின் மத்தியில் நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பேசிய Yvan Buchs என்ற பொலிஸ் அதிகாரி, நபரின் தாக்குதலுக்கு என்ன காரணம் என இதுவரை தெரியவரவில்லை.

எனினும், திட்டமிட்டு பெண்ணை கொல்ல முயற்சித்த காரணத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்

SHARE