பிரான்ஸைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெல்ல முடியாத யுத்தமொன்றை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் அண்மையில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்கள் தொடருமென தெரிவித்துள்ள அவர்கள் , அந்நாட்டை இல்லாதொழிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.