லண்டன், சுவிஸ் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் வெள்ளம்

336

 

லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸில் எழுச்சி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்!

தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈய்ந்த கொடைவள்ளல்களான மாவீரர்களை நினைவுகூரும் வகையில் தமிழ், ஈழ மக்களால் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றநிலையில் சுவிஸ் நாட்டிலும் எழுச்சிபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

சுவிஸ் Fribourg மாநிலத்தில் forum மண்டபத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றி .ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

SHARE