என்னுடையை வாழ்க்கையில் இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் விளையாடியதில்லை: அம்லா புலம்பல்

362

வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற கடினமாக ஆடுகளத்தில் விளையாடியதில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் அம்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

இதில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளின் ஆடுகளங்களுமே சுழற்பந்துக்கு சாதகமாக இருந்தது.

இதுவே தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் விளங்கியது.

இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் அம்லா கூறுகையில், “இந்த தோல்வி கடும் ஏமாற்றம் தான். மிகவும் கடினமாக டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

இது போன்ற கடினமான ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இல்லை. என்னுடையை வாழ்க்கையிலும் இது போன்ற கடினமான சூழ்நிலையில் விளையாடியது இல்லை.

எங்களால் முடிந்த வரையில் முயற்சி செய்தோம். ஆடுகளம் கடினமாக இருந்தது. புதிய பந்தாயினும், பழைய பந்தாயினும் நன்றாக திரும்பியது, அதே போல் நன்றாக எழும்பியது” என்று கூறியுள்ளார்.

SHARE