ஐஎஸ் தீவிரவாதியை திருமணம் செய்ய நினைத்த தன் மகளை எவ்வளோ தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது என அவரது தாய் உருக்கமாக கூறியுள்ளார்.பிரான்சில் கடந்த 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண்ணான பாடிமி ட்ஜர்பரோவோ(Fatime Dzharfarova) ஆதரவு தெரிவித்தார்.
அத்துடன் ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் போஸ்டரும் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது பாடிமி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் முடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தாய் கூறுகையில், ஒரு அசுரனுக்காக பெண்ணை பெற்றுள்ளேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகளை தடுத்து நிறுத்த சங்கிலியால் பிணைத்து வைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனில்லாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் எந்தவொரு தாயும் தன் மகள் தீவிரவாதியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கமாட்டாள் என்றும், தன் மகளை மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.