சவுதியில் தப்பிய இலங்கைப் பணிப்பெண்.

264

Sute_Girl

சவுதியில் நேற்று கல்லெறிந்து கொள்ளப்பட்ட 50 பேரில் இலங்கையர் எவரும் காணப்படவில்லையென சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மருதானையிலிருந்து சவுதிக்குச் சென்ற பெண்ணுக்கு கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் அவர் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் காணப்படவில்லையென தூதரகம் உறுதி செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த மரண தண்டனை சில நாட்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE