குழந்தைக்கு பாலூட்டிய தாயை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆல்கான் படை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்துள்ளது. v

313
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆல்கான் என்ற படையை, தங்கள் அமைப்பின் சில முக்கிய மேற்பார்வைகளுக்காக நியமித்துள்ளது.இதில் பெண்களும் அடங்குவர், இந்நிலையில், தாயார் ஒருவர் தான் அணிந்திருந்த பார்தாவால் குழந்தையை மறைத்துவைத்துக்கொண்டு பாலூட்டியுள்ளார்.

அப்போது, அந்த இடத்திற்கு வந்த பெண் ஆல்கான் படையினர், அக்குழந்தையை வாங்கி மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, தாயாரை காட்டுமிராண்டித்தனமாக சிதைத்து கொன்றுள்ளனர்.

இத்தகவலை துருக்கியில் வசித்து வரும் ஆயிஸா என்ற பெண்மணி தெரிவித்துள்ளார், இவர் இதற்கு முன்னர் சிரியாவில் உள்ள ராக்கா பகுதியில் வசித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 60 பிரித்தானிய பெண்கள் இந்த ஆல்கான் படையில் உள்ளனர், மேலும் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவில் பயங்கர சட்டதிட்டங்களையும் அமல்படுத்தி கையாண்டு வருகின்றனர்.

பெண்கள் யாரும், ஆண்துணையின்றி வெளியில் செல்லக்கூடாது அதுமட்டுமின்றி பெண்கள் எவ்வாறு ஆடை அணியவேண்டுமென்ற சில சட்டதிட்டங்களும் உள்ளன.

உடலை முழுவதையும் மறைத்து, கைகளையும் மறைப்பதற்கு ஏற்றவாறு கையுறைகளையும் அணிவேண்டும், அந்த ஆடைகள் சூரியஒளி அவர்கள் மேல் படாத அளவுக்கு இருக்கும்.

இந்த ஆடைக்கட்டுப்பாட்டினை மீறும் பெண்களை மண்ணில் நிற்கவைத்து உயிருடன் எரித்துக்கொலை செய்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

SHARE