தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த காதலர் மீது ஆசிட் வீசிய காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன் (19). இவரும் ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (22) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுராஜ், தனது வீட்டில் பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்ரீன், முன்னாள் காதலன் சுராஜ் மீது ஆசிட்டை வீசினார். இதில் முகம் மற்றும் உடல்பகுதிகள் கருகிய நிலையில் சுராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 50 சதவீத காயங்களுடன் சுராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சுராஜ் புகாரின் பேரில் அப்ரீனை காவல்துறையினர் கைது செய்தனர்.