ஊடகவியலாளரை தாக்கிவிட்டு தப்பிய நபர்

297
அமெரிக்காவில் ஊடகவியலாளர் ஒருவரை நேரலையில் மர்ம நபர் திடீரென்று தாக்கி விட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் பிரபல பாடகர் ஒருவரின் மறைவினை அடுத்து அவரது ரசிகர்களின் கருத்துகளை அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பி வந்தது.

அந்த ஊடகத்தில் செய்தியாளரான மேரி பேத், ரசிகர்களின் கருத்துகளை நேரலையில் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேரலை தொகுப்பு துவங்கியபோது ஊடகவியலாளரின் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென திரும்பி செய்தியாளரின் அருகே பாய்ந்து வந்துள்ளார்.

வந்தவர் செய்தியாளர் கேட்கும்படி ஆபாசமாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பம் அந்த செய்தியாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட்தும் விரைந்து வந்த பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை அப்பகுதி எங்கும் தேடியுள்ளனர்.

ஆனால் பொலிசாரால் அந்த நபரை அப்பகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் இச்சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE