இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திய இந்தியர்கள் கைது

285
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இவை இந்திய விலைப்படி 22.1 மில்லியன் ரூபாய் பெறுமதிக் கொண்டவை எனவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி- தஞ்சாவூர் பகுதியில், இந்தியாவின் சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த தங்கக்கட்டிகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்திய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலிருந்து படகொன்றின் மூலம் இந்தியாவுக்கு தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவை நாகபட்டினம் மாவட்டத்திலுள்ள கடல் பிரதேசத்தினூடாக கொண்டுவரப்பட்டதாகவுமே அவர்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் சுங்க அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப்பிரஜைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

crime-arrest

SHARE