கொள்ளையடித்தால் மரணம், மது அருந்தினால் கசையடி – ஐ.எஸ்.ஐ.எஸ்

292
லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

கொள்ளை செயலில் ஈடுபட்டது, இஸ்லாமிய மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறியது, கடவுளை பற்றி தவறாக கூறியது போன்ற செயல்களுக்காக 3 பேரை அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் வையின் குடித்ததற்காக 4 பேருக்கு கசையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புகைப்படங்களையும் தீவிரவாதிகள் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இதனிடையே சிறு சிறு குழுக்களாக உள்ள தீவிரவாதிகளை தங்களின் அமைப்பின் கீழ் கொண்டுவரவும் அவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது

இதன் காரணமாகவே மற்ற அமைப்புகளுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அவர்கள் மரண தண்டனை அளித்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE