சிறுவனுடன் உடலுறவு கொண்டாரா ரஷ்ய அதிபர்: முன்னாள் உளவாளியின் கூற்றால் சர்ச்சை

289
ரஷ்ய அதிபர் புடின் சிறுவனுடன் உடலுறவு கொண்டார் என்ற முன்னாள் உளவாளியின் கூற்றால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் அதிகாரியான அலெக்ஸாண்டர் லித்வினென்கோ, லண்டனில் ஹோட்டல் ஒன்றில் பொலோனியம் நச்சு கலந்து தேநீரை பருகியதன் காரணமாக மரணமடைந்தார்.

அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராபர்ட் ஓவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

லித்வினென்கோவின் மரணத்தில் ரஷ்ய அதிபர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக ராபர்ட் ஓவன் அறிவிக்கை தொரிவித்திருந்தது.

இந்நிலையில் அதிபர் புடின் சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டதாக லித்வினென்கோ தனது ப்ளாக்கில் எழுதியிருந்ததாக ராபர்ட் ஓவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லித்வினென்கோ தனது ப்ளாகில் எழுதியுள்ளதாவது, ஆண்ட்ரோபொவ் கல்லூரியில் படிப்பை முடித்ததும் உளவு அமைப்பான கேஜிபியில் சேர புடின் ஆயத்தமானர்.

எனினும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவில் நியமிக்கப்படாமல் கீழ்நிலை ஊழியராகவே அவர் நியமிக்கப்பட்டார்

இதற்கு முக்கிய காரணம் அவருக்கு சிறுவர்களுடன் உறவில் ஈடுபடும் பழக்கம் இருந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின்னர் எஃப்.எஸ்.பி. உளவு அமைப்பின் இயக்குனராக புடின் ஆனார். அப்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்.

மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துள்ளார்.

சிறுவன் ஒருவனுடன் புடின் உடலுறவு கொள்ளும் வீடியோவும் அதில் ஒன்று என்று லித்வினென்கொ தனது வலைதளத்தில் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ராபர்ட் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, புடினுக்கு எதிரான லித்வினென்கொவின் இந்த கூற்று மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்று.

அவரது மரணத்துக்கும் இந்த கூற்றுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனின் வயிற்றில் புடின் முத்தமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE