இரண்டாவது நாளாக தொடரும் தமிழக மீனவர்களின் ஆர்ப்பாட்டம்

288

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியறுத்தி இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகபட்டிணம், இராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட 6 பிரதேசங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 102 இந்திய மீனவர்களை கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுடைய மீன்பிடிப் படகுகளை இலங்கையின் கடற் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை திருப்பித்தரக் கோரியும் சிறையில் எஞ்சியுள்ள ஏனைய மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தமது பிரச்சனைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தலையிட்டு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளையும் ஆர்ப்பாட்டத்தினை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE