கடந்த சனிக்கிழமை வேலூரில் விண்ணிலிருந்து வேகமாக வந்த பொருளொன்று வெடித்து ஒருவர் மரணமடைய, மூவர் காயமடைந்தனர்.
அந்தப் பொருள் வீழ்ந்த இடத்தில் ஏற்பட்ட குழியிலிருந்து பெறப்பட்ட கரு நீலக் கற்துண்டங்களும் பரிசோதிக்கப்பட்டன.
ஆனால் இப்போது அந்தச் செய்தி பற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் மீது திருப்பிய இந்தச் சம்பவம் பற்றியும் வின்கற்கள் இலங்கையில் வீழ்ந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் பற்றியதுமான பார்வையை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் ஆராய்ந்தார்.