அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் சடலம்

282
மெக்சிகோ நாட்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் அரை நிர்வாணத்தோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வீரகிரஷ் மாநிலத்தில் உள்ள ஒரிசபா பகுதியை சேர்ந்தவர் அனாபெல் ஃப்லோரிஸ் சலாசர் (Anabel Flores Salazar).

இவர் எல் சோல் டி ஒரிசபா பத்திரிகையில் குற்றச்செயல்கள் குறித்து புலன்விசாரணை மேற்கொள்ளும் நிருபராக பணியாற்றிவருகிறார்.

கடந்த திங்களன்று ராணுவ உடையில் இருந்த 8 நபர்கள் ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு புகுந்துள்ளனர்.

பின்னர் வலுகட்டாயமாக தங்களின் வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த நாள் அண்டை மாநிலத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் இருந்த அவரது உடலை பொலிசார் கைப்பற்றுள்ளனர்.

சம்பவம் குறித்து ஃப்லோரிஸின் உறவினர் கூறியதாவது, ராணுவ உடையில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினர்.

பின்னர் ப்லோரிஸை இழுத்து சென்றனர். அவருக்கு இப்போது தான் குழந்தை பிறந்துள்ளது தயவு செய்து அவரை விட்டுவிடுங்கள் என்று நாங்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீரகிரஷ் மாநிலத்தின் ஆளுநர் கூறுகையில், பத்திரிகையாளர் என்பதால் அவர் கொல்லப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆண்டுகளில் மட்டும் மெக்சிகோவில் 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் 6 பேர் வீரகிரஷ் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இச்சம்பவம் பத்திரிகையாளர்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE