தெஹிவளை கவுடான பகுதியில் மீண்டும் எரிந்த நிலையில் சடலங்கள் மீட்பு

265

 

தெஹிவளை கவுடான பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின்னொழுக்கினாலேயே மேற்படி சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, 13 வயது மகள் மற்றும் மேலுமொரு உறவு முறை சிறுமி ஒருவருமே சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.

குறித்த குடும்ப உறுப்பினர்களின் சடலம் ஒரே வீட்டில் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் தந்தை 62 வயதுடையவர் எனவும் தாய்க்கு 52 வயது எனவும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE