பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் பாடசாலை மாணவத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கிவைத்தனர். இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடம் இணைந்து மாணவத் தலைவர்கள் ‘செல்பி’ எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.