மட்டக்களப்பு ஏறவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்-5 பிரதான வீதியில் இவ் விபத்து ஏற்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த கோவிலில் மதில் சுவரில் மோதுன்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
சாரதிக்கும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லையென ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இதுதொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.