குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு, ஆராதனைகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டருக்கு முன்பாக வரும் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி செங்கலடி புனித நிக்கொலாஸ் ஆலயத்தில் பங்குத் தந்தை G.மகிமைதாஸ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது.
ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு செங்கலடி மத்திய கல்லூரியின் பிரதான வீதி வழியாக சென்று தேவாலயத்தை அடைந்தனர். சிலுவைப் பாதை சிறப்பு திருப்பலி ஜெபம்மும் நடைபெற்றது.
வரும் வியாழக்கிழமை பெரிய வியாழக்கிழமையாகவும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வெள்ளியன்று தியான ஆராதனை நடைபெறும். இதே போல் அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது