ஆயிரகணக்கான இந்தியா,நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செக்ஸ் சிறை சாலைகளுக்கு விற்கபடுகின்றனர்.
பெண்களை இந்தியாவில் புதுடெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை பாலின கடத்துவோரின் இடமாற்ற இடமாக இருந்து உள்ளது.
சமீபத்தில் டெல்லியில் இயங்கி வரும் சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் உள்ளன. இங்கு உள்ள ஒரு வீட்டில் 2 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் மீட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்த தாய்-மகள் என்பது தெரியவந்தது. இதில் தாய்க்கு 44 வயது, மகளுக்கு 20 வயது. அவர்கள் இருவரையும் சவுதி தூதரக அதிகாரி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து அவரும், அவரது நண்பர்களும் பல முறை கற்பழித்தும், அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
இது போலத்தான் சர்வதேச பெண் கடத்தல் காரர்கள் விதிகளை மீறி பெண்களை கடத்தி வந்து மத்திய கிழக்கு செக்ஸ் அடிமை சந்தைகளில் குவிக்கிறார்கள்.கடந்த ஜூலை மாதம் 27 ந்தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய்த்தில் வைத்து துபாய் விமான ஏறச்சென்ற 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து விமான நிலையங்களில் குடியேற்றம் அனுமதி பகுதி மனித கடத்தல் மற்றும் ஆவணங்கள் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.பயணிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட மற்றும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட அறிவுறுத்த்ப்பட்டு உள்ளன.தற்போது ஆப்பிரிக்கா செல்வாக்கு பெற்ற அடிமைகள் சந்தையாக மாறி விட்டது.தான்சானியா மற்றும் கென்யா வில் இருந்து பெண்களை வாங்குபவர்கள் வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு டெல்லி போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துபாய் பயணம் மேற்கொள்ள இருந்த 76 நேபாள பெண்களை கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்டனர்.
பெண்களின் வறுமையை காரணம் காட்டி அவர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல சமபளம் வாங்கிதருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்கள் செக்ஸ் சந்தைகளில் ஏலத்தில் விற்கபடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் போலீசார் இவ்வாறு கடத்தப்பட இருந்த 230 பெண்கள் மீடகபட்டனர். இதே போல் 2013 ஆம் ஆண்டு 160 பெண்கள் மீடக்கப்பட்டனர். இதுபோல் 2012 ஆம் அண்டு 185 பெண்கள் மீடகப்பட்டனர். இதில் அதிகமான பேர் நேபாளத்தை சேர்ந்த பெண்கள் ஆவார்கள்.
நேபாள தலை நகர் காட்மாண்டுவில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு எந்த நேரடி விமானமும் இல்லை குடியுரிமை அலுவலகத்தில் இருந்து 18 நாடுகளின் அனுமதி தேவை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பஹ்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்டான், ஏமன், சூடான், புரூணை, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சிரியா, லெபனான், தாய்லாந்து, ஈராக் (குடியகல்வு தடை), “என ஒரு மூத்த டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மற்றொரு உண்மை இந்த் பெண்கள் அதிக விலைக்கு போகிறார்கள். காரணம் காட்மாண்டுவில் இருந்து 100 கிமீ மீட்டர் தொலைவில் உள்ள சந்துபால் சவுக் நகரம் மெல்கை கிராமத்தில் இருந்து வரும் பெண்கள் தவாங் குரங் இனத்தைச்சேர்ந்த பெண்கள் ஆகும் இவர்களுக்கு பெரிய கண்களும் அழகான தோற்றங்களும் கொண்டவர்கள ஆவார்கள்.ஏஜெண்டுகள் அவர்களது குடும்பத்தில் இருந்து ரூ. 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கொடுத்து கொண்டு வருகிறார்கள் சந்தைகளில் லடசகணக்கில் கூறி விற்கிறார்கள்.
போலீசார் இந்த வருடம் 8 பெண்கள் உள்பட 62 மனித கடத்தல்காரர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வருடம் 31 பெண்கள் உள்பட 199 பேர் கைது செய்யபட்டனர். 2013 ஆம் ஆண்டு 40 பெண்கள் உள்பட 286 பேர் கைது செய்யபட்டனர்.