துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை

306

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் போன்று நடந்து கொள்ள வேண்டாம் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.
Arjuna

அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றின் நிறைவில் ஜனாதிபதியை சந்தித்த அர்ஜூன, திலங்க சுமதிபால தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, அர்ஜூனவிற்கு ஆலோசனை வழங்கியதாக கொழும்பு ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திலங்க சுமதிபால தொடர்பில் அர்ஜூன பல தடவைகள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்காக போட்டியிட்டவரல்லவா? எனினும் மக்கள் அவருக்கே வாக்களித்தனர்.

நீரும் முன்னாள் ஆட்சியாளரைப் போன்றல்லவா நியமிக்கப்பட்டவரின் பதவியை மீளக் கேட்க வேண்டாம். அவர் தமது பணிகளை முன்னெடுக்க இடமளியுங்கள்.

மீளவும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் போட்டியிட்டு வெற்றியீட்டவும் என ஜனாதிபதி, அர்ஜூனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஞாயிறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE