முல்லைத்தீவு கரைச்சிக் குடியிருப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு 28.03.2016 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கரைச்சி குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்ததோடு சில அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், ஆலய குருக்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.