நன்பர்களுன் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் மரணமானதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்
லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீ மலை தோட்டத்தை சேர்ந்த பதினெரு வயதுடைய தேவசகாயம் தாவீதுராஜா என்ற சிறுவனே இவ்வாறு மரணமானதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்
03.04 2016 காலை 10 மணியளவில் டீ மலை தோட்டத்தில் உள்ள ஆற்றில் நண்பர்கள் நான்கு பேருடன் குளிக்கச்சென்ற மேற்படி சிறுவன் குளித்துக்கொண்டு இருக்கும் போது ஆற்றில் உள்ள சேற்றில் சிக்குண்ட நிலையில் உள்ளதை அவதாணித்த சக நன்பர்கள் உடனடியாக அயளவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமானதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்ததுடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்