வவுனியாவில்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒன்றுகூடல் !!!

255

 

வவுனியா மாவட்டத்தில், ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான அத்தியாவசியக் கலந்துரையாடல், நாளை மறுநாள் (06.04.2016 புதன் கிழமை அன்று) காலை 10.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக,
99e241fc-34ad-4cc0-b749-e23444cfa25f
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Searching,Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தை மீளக்கட்டமைக்கும் வகையில் புதிய நிர்வாகக்குழு தெரிவுகள் இடம்பெறவுள்ளதாகவும், சங்கத்தின் எதிர்கால செயல்த்திட்டங்கள் தொடர்பில் கூடிப்பேசி தீர்மானங்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனவே வவுனியா மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரையும் குறித்த ஒன்றுகூடலில் தவறாது கலந்துகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு 0094 77 330 1724 எனும் கைப்பேசி இலக்கத்தினூடாக தொடர்பினை மேற்கொள்ளுமாறும் அவர் அறியத்தந்துள்ளார்.
SHARE