எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்குள் அத்து மீறி பிரவேசித்ததாக சம்பந்தன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கடந்த 16ம் திகதி கஜபா படை முகாம் மீது பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து படை முகாமின் கட்டளைத் தளபதி உள்ளிட்ட சிலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள், வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.