முரசுமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து: மூவர் படுகாயம்

295

 

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு பயணித்துக் கொண்டிருந்த வேளை கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE