மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பப் பெண் உயிரிழப்பு

301

 

மட்டக்களப்பில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட உதய தேவி புகையிரதத்தில் குடும்பப் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர்.

ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கும் இடையில் தேவபுரம் பகுதியில் வைத்தே குறித்த குடும்பப் பெண் புகையிரதத்தில் மோதுண்டுள்ளார்.

படுகாயமடைந்த குறித்த பெண், புகையிரத நிலைய ஊழியர்களால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த பெண் மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிப்பிள்ளை ரஞ்சிதமலர் (வயது – 35) என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மரணம், விபத்தா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE