வவுனியாவில்
வவுனியா, செட்டிகுளம் கல்லாறு பகுதியில் வேகக்கட்டுபாட்டையிழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார், முள்ளிக்குளம் பரண முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படையினரை மதவாச்சி பேருந்து நிலையம் நோக்கி ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பள்ளத்தினுள் வீழ்ந்துள்ளது.
குறித்த பேருந்தில் 52 கடற்படையினர் இருந்த போதும், 23 கடற்படையினர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடற்படையினர் பயிற்சிக்கான பிரிவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.