தில்லியில் இருந்து இந்தூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுதள பாதையை விட்டு வயல்வெளியில் இறங்கியது.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் அளித்த அறிக்கையில்,’ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W-2793 தில்லியில் இருந்து இந்தூருக்கு 66 பயணிகளுடன் சென்றது. தரையிறங்கும் போது ஓடுதளப் பாதையில் இருந்து விலகி வயல் பரப்பில் இறங்கியது.
விமானத்தில் பயணம் செய்த 66 பயணிகள் உட்பட விமானக் குழுவினர் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் எவ்வித சேதமும் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், திடீரென விமானம் ஓடுதளப் பாதையில் இருந்து விலகியது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.