இறக்குவானை – கவுடுவாவ பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.