இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டேவிட் கமரனையும் சந்திப்பார்

306

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (வியாழக்கிழமை) லண்டலின் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன்போது, ஊழலுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், எதிர்கால செயற்பாடுகள் பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த மாநாட்டையடுத்து, இன்று மாலை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய விஜயத்தையடுத்து, நாளை இந்தியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி, அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அத்தோடு, நாளை மறுதினம் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கும் ஏற்பாடாகியுள்ளது.David-Cameron-Maithripala

SHARE