ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் பெண்ணுடன் சேஷ்டை சேஷ்டை புரிந்துள்ளனர்.

293

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் சேஷ்டை செய்ததாக கூறப்படும் மூவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர், புதன்கிழமையன்று வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்றுகொண்டிருந்த போது, வீதியில் நின்றுகொண்டிருந்த மூவர் அப்பெண்ணிடம் சேஷ்டை புரிந்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து, வைத்தியசாலைக்கு சென்ற அப்பெண்கள் வீதியில் தமக்கு நேர்ந்ததை வைத்தியசாலை பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் உடனடியாக இதுதொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து விரைந்துசெயற்பட்ட பொலிஸார், குறித்த இடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த மூவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்தவர்களிடமிருந்து 3 போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.jaffna

SHARE