மட்டு. மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி

271

மட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ், 64 இலட்ச ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத் தொகுதியின் மூலம், ஒரே நேரத்தில் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைசி ஹட்செஸன் (Bryce Hutchesson) அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய ஆலோசகர் சார்லற் பிளன்டல் (Charlotte Blundell) இணைச் செயலாளர் எட்வின் சின்கிளயர் (Edwin Sinclair) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா, உளநல புனர்வாழ்வு நிலையத்தின் வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான ரமேஷ் ஜெயக்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், பயனாளிகள், பயிலுனர்கள், சமூக நல சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.aus

aus02

aus03

aus014

SHARE