நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
மஸ்கெளியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரவுன்வீக் சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 18 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின் புறத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவினால் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை லயன் குடியிருப்பிலுள்ள 96 பேரையும் தோட்ட சிறுவர் நிலையத்திலும் சிறுவர் முன் பள்ளியிலும் தற்காளிகமாக தோட்ட நிர்வாகத்தினரால் தங்கவைக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதியில் தொடரும் மழையினால் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இரானுவத்தினரும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் அட்டன் கினிகத்தேன பகுதிகளீலும் மண்சரிவுகள் ஏற்படுள்ளதுடன் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்இருக்குமாறு அபாயம் தொடல்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்திற்கு அறிவிக்குமாறு மத்திய நிலையம் வேண்டுகோள் விடுக்கின்றது