தாஜூடீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

281
wasim_CI

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைய அவர்களுக்கு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாது எனவும் பிணை தேவை என்றால், மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்குமாறும் நீதவான் கூறியுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரணவீர, தாஜூடீன் கொலை குறித்து விசாரணை நடத்தும் போது சாட்சியங்களை மறைத்தாரா என்பதை அறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

SHARE