வன்னியில் ஆமிக் கடை மலசலகூடத்தில் இரகசிய கமரா!

324

 

வன்னியில் இராணுவத்தால் நடாத்தப்படும் சிற்றுண்டிச்சாலை மலசலகூட இரகசிய கமரா இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

timthumb

வன்னியில் ஏ9 இரணைமடுவுக்கு அருகில் இராணுவத்தால் நடாத்தப்படும் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் பெண்கள் மலசல கூடத்தினுள் இரகசியக் கமரா பொருத்தப்பட்டு பெண்களின் அந்தரங்கக் காட்சிகள் எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீடியோக்கள் கிளிநொச்சிப் பகுதி கணனி திருத்தகம் ஒன்றிற்கு இராணுவத்தால் கொண்டு வரப்பட்ட கணனி ஒன்றில் இருந்தே பலரது கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இக் காணொளியில் கூடுதலாக சிங்கள யுவதிகளும், குடும்பப் பெண்களுமே அகப்பட்டுள்ளனர்.

SHARE