ஐந்து மாவட்டங்களுக்கு தீயணைப்பு மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் பகிர்ந்தளிப்பு

285

 

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாத்தளை,வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவிற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதோடு, அவ்வாகனங்களுக்கான திறப்புகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

 

34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அம்புலன்ஸ் வண்டிகளும் இம்மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா,இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

SHARE