தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்…
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம் கணேச்மூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம் சுஹைர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.