பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் பருவம் அடையும் சிறுமிகளுடன் உறவு- 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் உறவு கொண்டுள்ளேன்.

392

 

பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் பருவம் அடையும் சிறுமிகளுடன் உறவு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் ஒன்று உள்ளது. பருவம் அடையும் பெண்களை முதல்  3 நாட்களுக்கு  பாலியல் உறவுக்கு ஈடுபடுத்துகிறார்கள்.இதற்கு மறுக்கும் பெண்ணால் அந்த குடும்பம் மற்றும் அந்த கிராமம் மிகுந்த சாபத்திற்கு உள்ளாவதாக அந்த கிராமத்தில் நம்பப்படுகிறது.இதனை பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என அழைக்கிறார்கள் அல்லது  குசசபும்பி என்ப அழைக்கிறார்கள்.

இதில் 12 வயது சிறுமிகள் கூட அடங்குவர். இதற்கு என  ஒருவர் வேலைக்கு நியமிக்கபட்டுஉள்ளார். அவர் பெயர் எரிக் அனிவா. இந்நபர் அங்குள்ள கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு அறிமுகமானவர், காரணம் இவர் அப்பகுதியில் உள்ள பெண்களை பாலியல் உறவுக்கு உட்படுத்தி உள்ளார்.

எரிக் அனிவா என்ற பெயரையும் தாண்டி அவரை கழுதைப்புலி( ஹெய்னா) என அழைக்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர், கிராமங்களில் வசிக்கும் பெண்களை பாலியல் உறவுக்கு  உட்படுத்துகிறார், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற்றால் அதனை கலைத்து விடுகின்றனர்.

இவ்வாறு, ஒரு பெண்ணை பாலியல் உறவு கொண்டால்  இவருக்கு கிடைக்கும் வருவாய் 3 டாலர் முதல் 5 டாலர்கள்  வருவாய் கிடைக்கிறது.

இதுகுறித்து இவர் கூறும் போது:-

12 வயது பெண்கள் என்னுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர், சில பெண்கள் 12 அல்லது 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். உறவில் ஈடுபடும் பெண்கள் என்னிடத்தில் மகிழ்ச்சியை காண்கின்றனர் என்றும் இதனால் நான் பெருமை கொள்கிறேன்.பணம் பெற்று கொண்டு 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் உறவு கொண்டுள்ளேன். சிலவிதவைகளை அவர்கள் கணவன் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் அவர்கள்  விருப்பத்தின் பேரில்   உறவு கொண்டுள்ளேன்.எனவும் கூறியுள்ளார்.
sex_illus_20121224
மால்வேயில் உள்ள கிராமத்தில் 10 இல் ஒரு பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள எரிக் அனிவா தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

இவருடன் வாழ்வதற்கே வெறுப்பாக உள்ளது என மனைவியர்களில் ஒருவரான பன்னி அனிவா கூறியுள்ளார். இந்த் வழக்கம் முடிவுக்கு வரவேண்டும் என்றும், இது எங்களுக்கும் பிற பெண்களுக்கும் துயரமான ஒன்று எனவும் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு இந்த தொழிலை செய்து வருவதற்கு, அந்த கிராமத்தில் உள்ள தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாலினம் சார்ந்த வன் செயலை நிறுத்த கல்வி மூலம் பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்  முயற்சி செய்து வருகின்றன ஆனால் முடியவில்லை.

SHARE