தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில்

298

 

தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில்

ranil-cm-300x200
நாட்டில் அமைதி நிலவியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை ஒழுங்கான முறையில் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது சதிவேலைகளை தமிழ் கட்சிகளுக்கிடையேயும், முஸ்லீம்களுக்கிடையேயும், சிங்கள மக்களுக்கிடையேயும் விதைத்துள்ளார். அண்மைக்காலமாக இவருடைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அதிதீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை வெறுமனே போர்க்குற்றம் மட்டுமே இடம்பெற்றது என்பதே ரணில் விக்கிரமசிங்கவினுடைய நிலைப்பாடாகும். அதனையே சிங்கள தேசம் கொண்டிருக்கின்றது. அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் பெற்றால் அது இலங்கையை அண்மித்துள்ள நாடுகளுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என்ற கருத்துக்களையும் அந்த நாடுகளில் விதைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இதுவரையில் நீக்காத ரணில் விக்கிரமசிங்க இதனை வைத்துக்கொண்டே தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைப் பெற்றக்கொடுக்க முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அவருடைய நிலைப்பாட்டின் படி வடகிழக்கை இணைப்பதோ, பொலிஸ் காணி அதிகாரம் வழங்குவதோ அல்ல. வெறுமனே போர்க்குற்றம் தான் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து ஒருசில இராணுவத்தினருக்கு தண்டனையை வழங்கிக்கொடுக்கும் நடவடிக்கையையே அவர் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்தி மின்சாரக் கதிரையில் நிறுத்துவதே ரணிலின் அன்றைய திட்டமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலைப்பாட்டின் படி சிங்களப் பேரினவாதிகள் மஹிந்த ராஜபக்ஷவை மின்சாரக் கதிரையில் அமர்த்தினால் தனது அரசியலை தென்னிலங்கையில் செய்யமுடியாது என்பதை உணர்ந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை அரசியலிருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகளையும், அவர் சார்ந்தவர்களுடைய சொத்துக்களை முடக்கும் செயற்பாட்டிலும் தீவிரமாக செயற்படுவது மட்டுமல்லாது தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பாலைவனை நரி சதாம் ஹூசைன், பனங்காட்டு நரி டக்ளஸ் தேவானந்தா, குள்ள நரி ரணில் விக்ரமசிங்க என்ற ரீதியில் வர்ணிக்கப்படுகின்றனர். விடுதலைப்புலிகளைப்போன்று இனி எந்த அயுதக்குழுக்களும் தலை தூக்காத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவினுடைய செயற்பாடு அமைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் மூளையைச் சலவை செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை ஒருபோதும் வழங்கப்போவதில்லை.

SHARE