அனுமதிபத்திரமின்றி மதுபானபோத்தல்கள் 25 கொண்டு சென்ற ஒருவரும் விற்பனையாளரும் கைது
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 25 மதுபானபோத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரையும் விற்னையாளரையும் அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்
06.08.2016 சனிக்கிழமை அதிகாலை அட்டனிலிருந்து டிக்கோயா பகுதிக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதே மேற்படி மதுபோத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதிகாலை மதுபானசாலையை திறந்து மதுபான போத்தல்களை விற்பனை செய்த மதுபானசாலை முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் மீட்கப்பட்ட மதுபானபோத்தல்களுடனால் முச்சக்கரவண்டியுடன் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்